உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை 15 நாட்களுக்கு ஒருவர் என்கவுன்டரில் கொல்லப்படுகிறார் என வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான 6 ஆண்டு பாஜக ஆட்சியில் என்கவுன்டர் பெயரிலான படுகொலைகள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.
கடந்த 3 மாதங்களில் வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் மட்டும் 6 பேரின் உயிர் பறிக்கப்பட்டது.முன்னாள் எம்.பி அத்திக் அகமதுவின் 19 வயது மகன் ஆசாத் அகமது உள்ளிட்ட 2 பேர், ஜான்சி நகரில் ஒரு மாதத்திற்கு முன்பு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பான பரபரப்பு அடங்குவதற்கு உள்ளேயே முன்னாள் எம்.பி அத்திக் அகமது, அத்திக் சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோரும்,நீதிமன்றத்திலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும்போது சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த இரு படுகொலை, காவல்துறையினரால் செய்யப்படாவிட்டாலும், காவல் துறையினரின் பாதுகாப்புடன், பத்திரிகையாளர்கள் அனைவரின் முன்னிலையில், இந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளது.இது உத்திரபிரதேசத்தில் என்கவுன்டர்கள் சர்வசாதாரணமாக நடைபெறுவதை வெளிச்சம் போட்டு காட்டியது.
அந்த வகையில், 2017 ஆம் ஆண்டு யோகி ஆதித்யநாத் முதலமைச்சரானது முதல் இதுவரை சராசரியாக 15 நாட்களுக்கு ஒருவர் என் கவுன்டரில் சுட்டுக் கொல்லப்படுகிறார் என்று வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.